Wednesday, February 18, 2009

தேடுதல் நேரம் முடிவடைய......

எட்டுமாத குழந்தை தன் தாயின் முகம் பார்த்தது. தாயின் கரங்களிலிருந்து விடுப்பட்டு கொஞ்ச தூரம் போய் விளையாடும் திரும்ப பார்க்கும் உடன் ஓடிவந்து தாயின் கரங்களுக்குள் சரணடைந்துவிடும்.

அன்றைக்கும் விளையாடியது. தாய்க்கு வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் தனக்கு தெரிந்தவர் வீட்டில் விட்டு செல்ல முடிவு செய்து தன் குழந்தையுடன் வீட்டிற்கு வந்தாள்.

பிள்ளையும் இறங்கி விளையாடியது. குழந்தை விளையாடிய நேரம் தாய் குழந்தையை விட்டு பிரிந்தாள்.

சில நிமிடங்கள் ஆகியிருக்கும் குழந்தையின் கண்கள் தாயை தேடின அதனுடைய எல்லைகளுக்குள் இடம்பெயர்ந்து தாயை தேடியது.

தேடுதல் நேரம் முடிவடைய அதனுடைய அடுத்த செய்கை
அழுகையாக வெளிப்பட்டதுஅங்கிருந்தவர்கள் புட்டிபால் கொடுத்து தூங்க வைத்தார்கள்.

தூங்கி விழித்ததுதாயை தேடியது. விளையாட வில்லை மலர்ந்திருக்கும் முகம் வாடியது யார் தூக்கினார்களோ தூக்கியவர்களின் தோள்களில் அப்படியே படுந்திருந்தது.

முகம் வெளிப்படுத்திய அதனுடைய சோகம் சொல்ல வார்த்தைகள் இல்லை.

அனாதை குழந்தைகள்............................

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails