Tuesday, February 17, 2009

பரிச்சயமில்லாத இந்த பெண்ணின் வருகை

ஊரையும் கடைத்தெருவையும் இணைக்கும் ஏரிக்கரை சாலை மிகவும் பிரபலம் அந்த பகுதி மக்களுக்கு வயல் வேலைக்கு செல்லும் ஆண்களும் பெண்களும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கடைத்தெரு செல்வோர் மற்றும் கூடை வியாபாரிகளும் இளைஞர்களும் யுவதிகளும்ஆடு மாடு ஊர்வன பறப்பன உட்கார பயணிக்க பயன்படும் சாலை அது.

காலை எட்டு மணி அந்த சாலைக்கு பரிச்சயமில்லாத பதினேழு வயதுடைய கன்னிப்பெண் தன் தோழியுடன் ஏரிக்கரை சாலையில் கொஞ்சம் தூரம் நடந்து சென்றாள்.

சாலைக்கு பழக்கமானவர்களின் கண்களுக்கு சாலைக்கு பரிச்சயமில்லாத இந்த பெண்ணின் வருகை வித்தியசமாக பட்டது.

யார்? ஏன்? வினா வுடன் அவளை க்கடந்து சென்றார்கள். அப்படி செல்பவர்களை பற்றிய கவலை இல்லாது தோழியை தனியாக நிற்க வைத்து யாருடனோ செல்பேசியில் பேசினாள்.

திரும்பவும் தோழியுடன் நின்றுகொண்டிருந்தாள். பத்து நிமிடங்கள் கழிந்தது இளைஞன் ஒருவன் தன் நண்பனுடன் வர..

நண்பனும் தனியாக நிற்க தோழியும் தனியாக நிற்க இளைஞனும் யுவதியும் பேசிக்கொண்டே நடந்தார்கள்.

அந்த காலை வேலையில் இவர்களின் செய்கை ஏரிக்கரை சாலையில் பல்வேறு விதமான மாற்றங்களை உண்டு பண்ணியது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails