Saturday, August 08, 2009

தலித் வீ்ட்டில் உணவு சாப்பிட்ட ராகுல்.


தலித் வீட்டில்உணவு சாப்பிட்டது நானோ..நீங்களோ .கிடையாது. ராஜீவ் காந்தியின் மகன். அதனால் தான் இன்றைய செய்திதாள்களுக்கு அது ஒரு செய்தி.

எங்க கிராமத்துல சொல்வார்கள் “ இருக்கிறவன் கிழிசல போட்டுகிட்ட அது எளிமை , இல்லாதவன் என்றால் அவன் கிட்ட நல்ல துணி உடுத்தி கூட வசதியில்லதாவன் என்று இகழ்வார்களாம்” அதனால கூழோ கஞ்சியோ உடுத்தற ஆடை முக்கியமுன்னு சொல்வார்களாம்.

ராகுல் போய் பைவ் ஸ்டார் ஹோட்டலில் உணவு சாப்பிடுதல் பெரிய விசயமல்ல. சாதாரண வீட்டில் உணவு சாப்பிட்டதது தான் செய்தி.

சாதிகள் இல்லையடி பாப்பா.. பாரதி

இங்கு செய்தி ராகுல் ஒரு தலித் வீட்டில் உணவு சாப்பிட்டார் என்பது முக்கியம்.

ஒரு தலித் வீடு என்பது அதை விட முக்கியம்.

இருப்பவனும் இல்லாதவனும் சாதிய வேற்றுமையும் இந்த செய்தியில் அப்பட்டமாக வெளிப்படுத்தப் படுகிறது.

அப்புறம் எங்கே சாதிகள் இல்லாமல் போவது? எங்கே சமநிலை?

எல்லாம் மாயை..

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails