Wednesday, August 26, 2009

தட்டுபட்டது

நலம் விரும்பி அவன் . அவனுடைய நிலைமை அவனுக்கு தெரியும் ஆனாலும் மற்றவர்கள் நலன் விரும்புவன் மற்றவர்கள் விரும்பலாம் விரும்பாமல் போகலாம் இவனுக்கு தெரிந்த நல்ல கெட்டதை சொல்லி விடுவான்.

ரோட்டில் போவோர் வருவோர்க்கு அல்ல அவனை சார்ந்தவர்களுக்கு அவனின் சுற்றமும் நட்புக்கும் மட்டுமே இவனுடைய யோசனைகளும் செயல்களும் அப்படி சொல்லி கேட்காமல் ஜெயித்தவர்களும் உண்டு தோற்றவர்களும் உண்டு .

அவனை பயன்படுத்தவார்கள் முடிந்தவரை இவனும் போய் செய்து கொண்டிருப்பான் காரியங்கள் முடிந்தவுடன் இவனை தூரவைத்துவிடுவார்கள்.

அப்படிதான் ஒருநாள் அந்த பெரியவரிடம் வீட்டுக்கு பொருள் ஒன்று வாங்கி வைத்துள்ளேன் வீட்டில் கொடுத்துவிடுங்கள் என்று கூற அதெல்லாம் முடியாதுப்பா என்று கூறி விட்டார்.

இவனை பயன்படுத்தியவர்களில் அந்த பெரியவரும் ஒருவர்.

யோசனைகள் செய்தான் இந்த பெரியவரின் பழக்கம் தேவையா என்று முடிவாய் அவருடன் பழகுவதையே விட்டுவிட்டான்.

அப்பொழுது புரிந்துகொண்டான் முதலில் சுயம்விரும்பியாக இருக்கவேண்டும் அதற்கு பிறகு தான் நலம் விரும்பியாக இருக்க வேண்டும் என்று .

எங்கோ பின்னனியில் நலம் விரும்பியிலும் சுயநலம் இருப்பதாய் எனக்கு தட்டுபட்டது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails