Saturday, January 10, 2009

சுவாசத்தின் முடிவைநோக்கி .......

வலைச்சுவர்களால்
குறுக்கபட்டு
மீனவர்களால்
பிடிக்கப்பட்ட மீன்கள்

மீனவனின் கூண்டுக்குள்
இங்கும் அங்கும்
அங்கும் இங்குமாய்
துள்ளியபடி

நீந்தியது
தண்ணீர் இல்லை

வாய் திறந்து
வாய் மூடி
செவுல் திறந்து
செவுல் மூடி
நீந்தியது
தண்ணீர் இல்லை

நீந்துவது
மீனின் இயல்பு
துள்ளலாய்
கூண்டுக்குள்
சுவாசத்தின்
முடிவை நோக்கி
நீந்திய மீன்கள்

1 comment:

A N A N T H E N said...

மீன்களைப் பற்றிய கவிதைதானே? வேறேதும் உள்குத்து வெளிகுத்து இல்லையே?

நல்லாருக்கு

LinkWithin

Related Posts with Thumbnails