திரும்பவும் மறுநாள் ஒன்றாக கூடினார்கள் பீர் பார்ட்டிகள்.
என்ன ராஜா மீன் கொழம்பு ஊத்தி சாப்பாடு சாப்பிட்டியலா ராத்திரி?
அட.. நீங்கவேற நெலம ஒண்ணும் சரியில்ல..வாந்தி எடுக்குற மாதிரி இருந்திச்சு..
ஏன்டாப்பா வம்புன்னுட்டு பாய் விரிச்சு போட்டு படுத்துட்டுங்க.
காலை ஏந்திரிச்சா.. அம்மா ஒரே பாட்டு உட்டுகிட்டு
இருந்திச்சி..
நைசா நழுவிட்டேங்க.. ஒரு பீரோட நிப்பாட்டிருக்கனுங்க..
ஆமா..நீங்க என்னாச்சு..
அத ஏன் கேக்குறீங்க
நான் ஒரு பீர் அடிச்சுட்டு போன தனியா வீட்டு திண்ணையில உக்காந்து எதாச்சும் யோசிப்பங்க..
நாம தெளிவா இருக்கோம் நெனைச்சிட்டு போய் திண்ணையில
உக்காந்தாங்க பேண்ட் சட்டையெல்லாம் மாத்தல ..
படுத்துகிட்டே யோசிப்போம் நெனைச்சிட்டு கையில இருந்த நீயூஸ்பேப்பர் விரிச்சி படுத்தங்க ..
அவ்வளதான் ப்ளாட்.. கால அஞ்சு மணி எங்க பெரிம்மா வந்து
ஏலே ..எந்திரி ..என்ன இப்படி படுத்துகிடக்க.. உடம்பு சரியில்லையா
போ எந்தரிச்சு போய் உள்ள படு..
அப்பதான் முழிச்சு பாத்தா எந்நெலம எனக்கு தெரிஞ்சுதங்க.
நம்ம கோபி கத என்னாச்சு தெரியல ராஜா.
எல்லா நம்ம கததான் ஆயிருக்கும்.
2 comments:
:)
நாட்குறிப்பு வகை எழுத்துக்கள் நல்லா வந்துருக்கு
நன்றி கையேடு
Post a Comment