Friday, July 03, 2009

நினைக்கவில்லை நடந்துவிட்டது.

கடந்து விடுவார்கள் என்ற அவன் நினைப்பு தொடர்ச்சியாக ஒலிப்பான் ஒலித்து கொண்டே வந்த வண்டி
கொஞ்சம் கூட வேகம் குறையவில்லை .

சைக்கிள் ஓட்டி சென்ற பெண்மணிக்கு சாலையைக் கடக்க நேரம் போதவில்லை. சென்று விடுவார்கள் என்பது அவன் அனுமானிப்பு பொய்த்து போனது நினைக்கவில்லை நடந்துவிட்டது.

இருசக்கர வாகனம் சைக்கிள் மீது மோதியது பிள்ளையுடன் தரையில் விழுந்தாள் பெண்மணி ஏம்மா.. நான்தான் ஹாரன் அடிச்சிகிட்டே வாறேன் நீ பாட்டுக்கு வர்ற... என் தன் பக்க நியாத்தை சொல்லியவாறே தன்னுடைய வண்டியை நிமிர்த்தினான்.

பெண்மணி ஓடிப்போய் பிள்ளையை தூக்கினாள் மண்டை உடைந்து ரத்தம் வந்தது. காபி தூள் வாங்கி வாங்க என்று பக்கதில் உள்ளவர்களிடம் சொன்னாள். காபி தூள் வாங்க ஓடினார்கள்.

திருப்பமுன்னு தெரியுதுல்ல நீ மெதுவா வரவேண்டியதானே என்று வண்டி ஓட்டியவனை திட்டினார்கள் பொது ஆண்கள்.

வண்டியை ஸ்டார்ட் செய்ய முனைந்தான் . பொதுமக்களில் ஒருவர் அடிப்பட்ட பிள்ளையை டாக்டரிம் காண்பித்துவிட்டு போ என்று சொல்ல..

என்கிட்ட காசு இல்லீங்க .. என்றவாறு போக முனைந்தான். எலா நாங்க சொல்லிகிட்டே இருக்கோம் நீ பாட்டுக்கு போறேன் சொல்ற இன்னொருவர்.

நான் போவனுங்க விடுங்க..

யோவ் இவன் சொன்னா கேக்கமாட்டான் வண்டிய புடுங்கி வெச்சுறு போலீச கூப்பிடு என்று கூடிய ஆண்கள் பேச ..

இல்லீங்க ..நான் போறேன் என்று சொல்லியவாறே டாக்டரிம் அழைத்து சென்றான் பிள்ளையை..

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails