அவன் சம்பாதிக்க ஓடி கிட்டே இருப்பான். என்ன எல்லாருக்கும் ஒரே விதமா வாழ்க்கை அமையறது இல்ல அது போல இவனுக்கு அமைஞ்ச வாழ்க்க அந்த மாதிரி ஓடுவான் ஓடுவான் ஓடி கிட்டே இருக்கிறான்.
இன்னொருத்தர் இருக்கார் அவர் வாய் தொறந்து பேசுனாரு நீங்க காசு எடுத்துட வேண்டியதான் உங்க பாக்கெட்லேந்து.. அட ..ஏங்க இப்படின்னு கேட்டா..நீ வேற..
நான் அவசரத்துக்கு தெரிஞ்சவன் ஒருத்தன் கிட்ட காசு கேட்டேன் அவன் யாரோ மாதிரி பேசுறான்.
நடுத்தர குடும்பம் அந்த பையன் வயசுல ஓடி சம்பாதிக்கல எப்படியோ குடும்பத்துல அவனுக்கு கல்யாணத்த பண்ணிவக்க பொண்ணு போட்டு வந்த நகை ஆறு மாதம் ஜேரா
ஓடிச்சி அப்புறம் பாக்கணும் இவன் சம்பாதிக்கணும்
சம்பாதிக்கணும் எல்லோருரிடம் ஐடியா கேக்கிறான் என்ன செய்ய..
பெரிய குடும்பம் வருமானம் பத்தல வயசு ஆர்வம் ஆசை எல்லாம் இருக்கும் அத்தனையும் விட்டாதான் நாள காலை அடுப்பு எரியும். அவனுக்குள்ள வாய்ப்பு எங்கிருந்தாலும் ஓடுவான்.
அத வாங்கி கொடுடா ..நான் வாங்கி தர்றேன் நீ எவ்வளோ கமிசன் தர்ற சொல்லு ..பத்து தர்றேன்..பத்தாது ..ஏதாச்சும் சேத்து போட்டு கொடு முடிச்சிடுறேன். எனக்கு தேவை கமிசன் வேல கச்சிதமா முடியும். நான் சம்பாதிச்ச தான் நாலு பய மதிக்கிறான்.
ஒவ்வொருத்தருக்கும் ஒரு காரணம் ஓடி சம்பாதிக்க.. ஆமா உங்களுக்கு என்ன காரணம்?
No comments:
Post a Comment