Monday, July 06, 2009

அவள் தான் அந்த வீ்ட்டு ஆம்பிள்ளை


அவள் தான் அந்த வீ்ட்டு ஆம்பிள்ளை . அந்த வீட்டு தொழில் துணி வெளுத்தல். பெண்கள் நான்கு பேர் ஆண்கள்
இரண்டு. வயதான தந்தை தாய்.

இவளுக்கு கல்யாணம் நடந்தது . இவளுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று கணவன் திடீரென இறந்துவிட்டான் . இவளும்
பிறந்தகம் வந்தாள்.

இங்கு சூழல் ஆண் பிள்ளைகள் இருவரும் சிறியவர்களே. அப்பா சக்தி இருந்த வரையில் பிள்ளைகள் பெற்றுவிடடார். தொழிலுக்கு என கடை வைந்திருந்தார். அப்படியும் இப்படியுமாக குடும்பம் ஓடிவிடும்.

இவள் வந்தாள் கடையை தத்து எடுத்து கொண்டாள். தந்தைக்கு துணிகளை துவைக்கும் வேலையை மட்டும் கொடுத்து கடை வேலைகளை இவள் கவனித்து கொண்டாள்.

வீட்டு நிர்வாகம் கடை நிர்வாகம் கொடுக்கல் வாங்கல் என அத்துனையும் பார்த்தாள். கடும் உழைப்பு குடும்பத்தை நல்லபடியாக்கினாள். தனது தங்கைகளுக்கு திருமணம் செய்வித்தாள்.

கண்கெதிரான அவளுடைய கஷ்டங்கள் சந்தித்த அவலங்கள் எந்த மனிதனுடைய கஷ்டமும் அவளுடைய கஷ்டங்களுக்கு முன் சாதரணம் தான்.

இப்பொழுதும் அவள் பிள்ளைகளை வளர்த்து அந்த குடும்பத்துடைய அத்துனை நல்லது கெட்டதுகளை சமாளிக்கிறாள்.

அந்த குடும்பத்தில் அக்கா சொல்லிடிச்சின்னு அதற்கு மறு பேச்சு யாரும் பேச மாட்டார்கள். தன் கணவனை இழந்து நின்றாலும் முடங்கி விடாது தன்னால் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேற்றினாள். காக்கும் தெய்வமாய் இவள்.

2 comments:

சகாதேவன் said...

வெளுத்து விட்டாள்

சகாதேவன்

துளசி கோபால் said...

பெண்கள் நாட்டின் & வீட்டின் கண்கள்.

அருமையான பதிவு.

LinkWithin

Related Posts with Thumbnails