Saturday, July 11, 2009

கிராம நெலம்.

அது கிராமம் கிராம பஞ்சாயத்து உண்டு. ஊர் முக்கியஸ்தர்கள் கிராம திருவிழா கிராமத்திற்கான தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக கிராம பஞ்சாயத்தாக தங்களை கட்டமைத்து கொண்டார்கள்.

ஒவ்வொரு கிராம கூட்டத்தின் போதும் கூச்சலும் குழப்பமும் அதிமாகவே இருக்கும்.

அன்றும் அப்படிதான்கிராம நிலத்த இன்னிக்கு ஏலம் உட்டே ஆவனும் என்றார் ஒருவர்.

கிராம வரவு செலவு பாக்கம நெலத்த ஏலம் போட முடியாதுங்கே ஆமாம்.

நாலங்சு வருசமாவுது கணக்கு பாத்து ஒரு செலவும் உருப்படியா செஞ்சபாடில்ல அதனால கணக்க பத்தி பேசுங்க அப்புறம் பாத்துகலாம் இன்னொரு கிராமத்தார்.

கணக்கு பாக்குறப்படி பாருங்க அதுக்கு ஏம்பா நெலத்த ஏலம் போட முடியாதுன்னு சொல்றீங்க என்றார் கிராம தலைவர்.

ஒருத்தரடோ விருப்பத்துக்கு கிராமம் கட்டுபடாது எல்லாருடோ வார்த்தையும் கேளுங்க கூட்டத்தில் ஒருவர்.

நானும் கிராமத்துல ஒருத்தன் தான். எனக்கு எங்கருத்த சொல்ல அதிகாரம் உண்டு நெலத்த ஏலம் போட முடியாதுன்னு சொன்னவர்.

எப்பா அவரு ஒன்னும் சும்மா சொல்லல அவரு கேக்கறதும் கரெக்டுதான் .

ஊரு பாக்குற நீங்க கிராம திருவிழா நடத்துல அஞ்சு வருசம் ஆச்சு தெருவுக்கு சாமி வந்து கேட்டா காரணம் சொல்றீங்க..

வர்ற வருமானம் எங்க போச்சு சொல்லிட்டு கிராம நெலத்த ஏலம் விடுங்க..

நீங்க பாக்குறபடி பாருங்க ..நெலம் ஏலம் உட்டாவுனும்..

முடியாதுங்க.. எல்லாத்தயும் சரி பண்ணிட்டுதான்.

அதெல்லாம் இப்ப முடியாது.

யேவ் ..இங்கவாய்யா நான் பாட்டுக்கும் கத்திகிட்டு கெடுக்குறேன். ஏன் உனக்கு நெலம் வேண்டாமா…

அதான் நீ பேசுறீய அப்புறம் நான் என்ன..

உங்க விருப்பதான் கிராமமுன்னா நாங்க எதுக்கு என்றபடி எழுந்து சென்றார்கள்.

கூட்டம் எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது.

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம்ம்ம் அப்படியே இருக்கு

LinkWithin

Related Posts with Thumbnails