விடிந்த பொழுதுகளில்
விடிந்த பொழுதுகளில்
தோன்றிய
கவலைகள்
காலைபொழுதின்
உணர்வுகளை
அனுபவிக்காமல்
செய்த மனது
தூக்கியெறிய முடியா
கவலைகள்
சுமந்தப்படி
இயந்திரமாய்
குளித்து
உணவு உண்டு
கோபமாய்
சிடு சிடுத்து
சிரித்த குழுந்தையின்
சிரிப்பை
புறந்தள்ளி செல்கையில்
வாழ்வின்அர்த்தங்கள்
புரிய
வெகுதூரமாய் ..
No comments:
Post a Comment