இன்றைய காலை கண் விழித்தவுடன் ஒழுங்கு பட அமைந்த மனது. மனதின் அமைதி எனை சருகாக்கியது. இந்த தகுதி மிக சில விநாடிகள் தான்.
கண்கள் பார்த்த முதல்பார்வை எண்ணங்கள் உயிர் பெற்றன. மிக சில நேரம் தான் அதில் பயணிக்க அடுத்த விசயம் பற்றிய மனதுடைய அடுத்த கட்ட பயணம் ஆரம்பம் அமைதி காணாமல் போனது.
எண்ணங்களை கையாள நினைத்தேன். முடியாது விரும்பாத எண்ணங்களுக்கு உயிர் தந்து மனதின் மௌனம் மனதாலயே கலைக்கப்பட்ட விநோதம்.
மதிப்பீடு சூழ்நிலையின் விளைவால் தேக்கி வைக்கப்படும் கருத்து எண்ணங்களின் மொத்த கூட்டுதொகையாக மனது அடுத்து வரும் நிகழ்வுகளை பற்றி அனுமானங்கள் அறிவு என்ற பெயர் சூட்டி சிந்தனை என்ற பெயரில் ஒப்புமை செய்ய முடிவுகள் சரியாகவோ தவறகவோ அமைந்தன.
எண்ணங்களிலிருந்து விடுபட முயற்சி செய்து திரும்பவும் எண்ணத் தொகுப்புகளால் ஆளப்படுகிறேன்.
1 comment:
\\மனதின் மௌனம் மனதாலயே கலைக்கப்பட்ட விநோதம்.\\
விநோதமல்ல, இயல்பே அதுதான்..
வாழ்த்துக்கள்...
Post a Comment