அந்த பகுதியில் பிரபலமான கடை தேநீர் அருந்த வடை பஜ்ஜி சாப்பிட ..
அண்ணா ஒரு டீ வடை ஒன்னு கொடுங்க என்றான்.
வடையும் டீயும் வந்தது. வடை எடுத்து ஒரு கடி அவன் முகம் உடனே சுருங்கியது.
அண்ணா ஒரே உப்புண்ணா என்று சாப்பிடமால் ஒதுக்கி வைத்துவிட்டு தேநீர் அருந்தி முடித்தான்.
காசு கொடுக்க கல்லா பெட்டி அருகே சென்றான். எவ்வளவு காசு என்றான் டீ வடையும் சேர்த்து ஆறு ரூபா கொடுங்க என்றார் கடை முதலாளி.
வடைக்கு சேத்துமாண்ண காசு என்றான் .
ஆமாம் என்றார். இன்னக்கு உப்பு அதிகமாயிடுச்சுப்பா என்றார்.
எண்ண உங்களுக்கு உப்பு அதிகமுன்னு முன்னடியே தெரியுமில்லே சொல்லவேண்டியதானே என்றான்.
முதலாளி ஒன்றும் சொல்லவில்லை.
அவன் தினமும் டீ அருந்தும் கடை நல்ல பழக்கவழக்கம்.
ஒன்றும் சொல்ல முடியாமல் வடைக்கும் சோ்த்து காசு கொடுத்தான்.
முகம் பார்க்க காசு நஷ்டம் இவனுக்கு ஆன செலவை ஈடுகட்ட விற்பனை செய்யும் கடை முதலாளி என்ன செய்ய..
No comments:
Post a Comment