தன்னுடைய கூட்டிலிருந்து பறவைகள் தூக்கத்தை கலைத்து கொள்ளும் நேரம் என் கண்களும் கூடவே விரிக்கின்றன்.
தூக்கம் கலைக்கிறேன் துக்கமாய் கவலைகளுடன் கண் விழிக்கிறேன்.
இனிமையான காலை வேலை என்று கவிஞர் கவிதையில் தான் பார்க்கிறேன். என்னுடைய காலைகள் எல்லாம் கவலை கூடுகளை சுமந்து கொண்டே கண்கள் திறக்க நிம்மதி எப்போது தெரியவில்லை?
நம்பிக்கை வருகிறது கூடவே அவநம்பிக்கையும் வரும்.
கடந்த காலங்களை உற்றுபார்த்து நிகழ்காலத்தை மறந்த என்னுடைய மனதில் எதிர்காலம் கண்டு பயம் இருக்கவே செய்யும் இந்நிகழ்வு என்னில் தானா அல்லது எல்லோர் மனதிலுமா விடை காணும் ஆவல் இருக்கவே செய்கிறது.
எவ்வளவு விசித்திரங்கள் எத்தனை விதமான மனித மனோபாவங்கள் இனம் காண முயல்கிறேன். போலிதனங்களை உண்மையாய் நம்பி என்னிலே இருக்கும் உண்மையை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டதாக உணர்கிறேன்.
No comments:
Post a Comment