அதனுடைய நகருதலில் விரைவு தெரிந்தது. எறும்பு ஒவ்வொன்றும் ஒரு திசையாய் பயணித்தது. சில எறும்பு அங்கும் இங்கும் அலைந்தது. சில எறும்புகள் சேர்த்து வைந்திருந்த உணவு துகள்களை தூக்கி ஓடின.
மரம் மரத்தின் அடியில் கிடந்த கல்லில் துளை போட்டு கல்லின் அடியில் உள்ள மண் பரப்பில் அதன் வாழிடம் அமைந்திருந்தது.
எறும்புகள் வந்து செல்லும் துளையில் இடையூறு ஏற்படாத வரையில் அதனுடைய நகருதல் இயல்பாக அமைந்திருந்தன. உணவுக்காய் அலைதல் தேடிபிடித்த உணவுதுகள்களை உள்ளே கொண்டு செல்லுதல் திரும்பவும் வெளிவருதலாய் தொடர்நிகழ்வாக அதனுடைய நகருதல் அமைந்திருந்தன.
வந்து செல்லும் வழியில் நீர் விழுந்தது. தொடர்சியாக நீர் விழுந்தது திக்கு முக்காடி ஒவ்வொன்றாய் வெளிவந்து இடம்பெயர நீர் வருவது நின்றவுடன் உணவு துகள்களை சுமந்தவண்ணம் எறும்புகள் வெளிவந்தவண்ணம் இருந்தன.
கும்பல் கும்பலாய் வெளிவந்து நின்றன.சிறிது நேரம் கழிந்தது வரிசையாய் நகருதல் அமைந்தது. எறும்புகள் இன்னமொரு பாதுகாப்பான இடம்நோக்கி இடம் பெயர்ந்தது.
No comments:
Post a Comment