Friday, April 24, 2009

பிள்ளைகளின் போக்கு

தனக்கு கிடைக்கும் சம்பள பணத்தில் தன்னுடைய தேவைகளை குறைத்து மீதம் பண்ணிய பணத்தில் நூறு குலி நிலமாய் சோ்த்து சேர்த்து கிட்டதட்ட பதினைந்து மா நிலத்துக்கு சொந்தமான விவசாயி அவர்.

நிலத்தில் உழைப்பை விட்டால் வீடு வீடு நிலமாய் இருந்ததால் தன்னுடைய விவசாய நிலத்தை பெருக்கினார்.

மூன்று ஆண் பிள்ளை ஒரு பெண் பெண்ணை கட்டி கொடுத்துவிட மூன்று ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தது.

தங்களிடம் பதினைந்து மா இருக்கிறது என்ற நினைப்பில் தன்னுடைய விவசாய நிலத்தில் கூட உழைக்க மறுக்கும் பிள்ளைகள்.

இந்த விவசாயி இன்னமும் நிலத்தில் உழைத்தப்படி இருக்க பெரிய பையன் லோடு மேனாய் வேலை பார்க்கிறார்.
நல்ல சம்பாதிப்பு அத்தனையும் குடித்தே காலிப்பண்ண கூட்டு குடும்பமாய் வாழ்ந்ததால் அவருடைய தம்பிகளும் பொறுப்பற்ற முறையில் நடக்க ஆரம்பித்தனர்.

தம்பிகள் நிலத்தில் உழைத்தாலும் இவருக்கு விவசாயத்தில் கிடைக்க கூடிய பலனுக்கு பங்கும் உண்டு. இவருடைய சம்பளம் வீட்டிற்கு வருவது கிடையாது. அதனாலயே தம்பிகளும் அலட்சியம் பண்ண வீட்டின் சூழல் இருந்தும் கஷ்டமே..

இந்த விவசாயி எவ்வளவோ எடுத்து சொல்லி பார்க்க பிள்ளைகளின் போக்கு அப்படியே இருந்தது. எது எப்படியோ தனக்க பிறகு தன் பிள்ளைகளுக்கென்று ஏதாவது இருக்க வேண்டும் என்ற நினைப்பில் மிகுந்த கஷ்டங்களுக்கிடைய தன் நிலத்தை காப்பாற்றுகிறார்.

கூட்டு குடும்பத்தில் மூத்த பிள்ளையின் பங்கு பொற்றோர்களின் நடத்தைக்கு இணையாக இருந்தால் மட்டுமே குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails