தோல்விகள் மற்றும் ஏமாற்றங்கள் காரணமாக ஒரு மனிதனின் அணுகுமுறையே மாறிவிடுகிறது.எதையும் இறைவனின் பிரசாதமாக ஏற்கப் பழகிக் கொண்டு விட்டால் தோல்வி மனப்பான்மையும் விரக்தி எண்ணமும் மறைந்துவிடும்.
எதையும் எப்போதும் ஆண்டவன் தரும் பிரசாதமாக ஏற்கப்பழகிக் கொண்டுவி்ட்ட ஒரு கர்மயோகிக்கு துயரம் என்பதே கிடையாது.
அவர் மனம் எப்போதும் உற்சாகத் துள்ளல் போட்டுக் கொண்டிருக்கும்.
-சுவாமி தயானந்த சரஸ்வதி-
எதையுமே ஆண்டவன் தரும் பிரசாதமாகஏற்க பழகுதல் என்பது மிகவும் கடினம்.
நாம் எதிர்பார்த்தது கிடைக்காமல் போகும் போதுதான் அது தோல்விகளாய் ஏமாற்றங்களாய் உருமாற்றம் பெறுகின்றன. இதை மனது இயல்பாக ஏற்றுக்கொள்ளுதல் என்பது சந்தேகம் தான். ஒரு சிலருக்கு வாய்க்கலாம் அவர்களை கணக்கில் எடுத்து கொள்ளலாமா தெரியவில்லை.
1 comment:
மிகவும் சரி
Post a Comment