Friday, June 19, 2009

எத்தன பேர் வர்ற சொல்லுற..


உளுந்த எடுத்து புடுலாமா கர்ணா…

இன்ன ஒரு நாலு நாளு போவட்டுங்க எடுத்துபுடுவோம்.

இல்ல கர்ணா..எடுத்து புடுவோம் . ரெண்டு நாளா மாடு ஒன்னு வந்து ராவடி பண்ணிகிட்டே இருக்கு ஒன்னு ரெண்டு காயி இருக்கதான் செய்யும் அதெல்லாம் பாக்கபுடாது கர்ணா..

யாரு மாடுங்க அது.

யாரு மாடுன்னே தெரியல..நானும் தெருவுல போயி விசாரிச்சு பாத்தாச்சு இன்னக்க கூட கரெக்டா டயத்துக்கு வந்துருச்சு ரோட்ட தாண்டி போய் வெரட்டிட்டு வர்றேன்.

சரி.. சரிங்க அப்புறம் ஏன் போட்டு வைச்சிகிட்டு நாளக்கு ஆள வர சொல்லி புடுறேன் எடுத்து புடுவோம்.

எத்தன பேர் வர்ற சொல்லுற கர்ணா..

என்னங்க ஆறு சனம் வர்ற சொல்றேன் பாத்துகலாம் எடுக்க முடிஞ்சா எடுக்கட்டும் இல்லாட்டின்னா மக்க நாளு எடுத்து போவுது என்னப்ப இப்ப தக்கா முக்கி பாத்துட்டு செய்வோமுங்க..

அய்யா அப்படியே குறுவைக்கு விறைய விட்டுபுடுவோங்க.. தண்ணி இப்ப வராது போருல தண்ணிய பாச்சுப்போம் . பாதிலேயே தண்ணி வந்துச்சுன்னா அதக்கு தக்கவாறு பாத்துப்போம்.

சரி கர்ணா..உளுந்து எது மிச்சமா இருக்குமா..

பாப்புங்கய்யா..நாம தண்ணி பாச்சின பிறகு ரெண்டு நாள்ல மழ பேஞ்சு போச்சுய்யா பாதி செடி செத்து போச்சு..

என்னய்ய செய்யிறது நாம எவ்வளோ மெனகெட்டாலும் மானம் ஒத்துழைச்சாதாங்க உண்டு.

வர்றேன் கர்ணா..

நீங்க வாங்கய்யா..

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails