“ டமார்” என்று வேகமாக கதவு அடித்து சாத்தப்பட்டது. யார் மீதோ வெளிப்படுத்தா முடியா கோபம் கதவில் வெளிபடுத்த முடிந்தது. எல்லோரும் மௌனம் காத்தார்கள்.
கதவு யார் மீது வெளிப்படுத்த முடியும் கதவில் பொருத்தபட்டிருந்த நாதாங்கி மெதுவாய் ஆடி நின்றது.
நிசப்தம் நிலவியது. கதவை ஓங்கி அடித்து சாத்தியவர் மீது கோப பட முடியா சூழல் நிசப்தம்.
“ டமார் ” அடித்து சாத்தப்பட்டது கதவு. கதவை சாத்தியவன் சிறுவன் அம்மா கேட்டாள் எதிர்பார்தது கிடைக்கவில்லை கோபம் . வெளிப்படுத்த முடியாமல் சிறுவன் வெளிப்படுத்திய இடம் கதவு. உணர்வுகளின் விளைவுகளை உள்வாங்கி கொண்டது.
அம்மா கேட்டாள் சிறுவன் மௌனமாக நின்றான். வீட்டு கதவு உடைஞ்சு போச்சுன்னா என்ன செய்ய என்று கேட்டவாறு சிறுவனை அடித்தாள். அழுதவாறே அவ்விடம் அகன்றான்.
ஊர் திருவிழா சாமி புறப்பாடு வெடிகள் வெடிக்கப்பட்டது. டமார்..டமார் என்ற சத்தம் இருகைகளால் காதுகளைஅழுத்தி பொத்தியப்படி கண்கள் மூடியப் படி இருக்க அப்படியே நின்றாள் இளம் பெண்.
வெடி வெடித்து முடிந்த பிறகும் அப்படியே நின்றாள்.
அருகில் நின்றிருந்த தோழி தட்டி எடீ ..கைய எடு..எடுத்தாள். சிறிது நேரம் ஒன்றும் புரியவில்லை கண்களை கசக்கியவாறே தோழிகளுடன் நடந்தாள்.
நிறைந்த பயணிகளுடன் பேருந்து ஊர்ந்தது அடுத்த பேருந்து நிலையத்தை தொ ட தூரம் இருக்கையில் டீயூப் வெடிக்க டயர் டமார் என்ற சத்தத்துடன்வெடித்தது. மிகுந்த சிரமப்பட்டு பேருந்தை ஓரங்கட்டினார் ஓட்டுனர்.
எல்லோரும் கீழிறிங்கினர் பாதி தன் அலுவலின் அவசரம் தன்னையே நெந்தார்கள். அடுத்த பேருந்தை எதிர்நோக்கி எல்லோர் கண்களும் உற்றுநோக்கின. வரும் பேருந்து முக்கியம் பெற்றது. அதுவும் நிறைந்து வந்தது முடிந்தவர்கள் முண்டியடித்து ஏறினார்கள். பாதி பேர் நின்றார்கள் நடந்தார்கள் பரிச்சயமில்லாதவர்கள் கூட பழகியவர்கள் போல் பேசிக்கொண்டார்கள் அவர் அவர்களின் எண்ண ஓட்டங்கள் பரிமாற கொள்ளப்பட்டன.
No comments:
Post a Comment