Saturday, June 20, 2009

முதிர் கன்னி


இன்னமும்
முதிர்கன்னிகளாய்
பெண்கள்
கிரகம் சரியில்லை
தோஷம் பெண்ணுக்கு
வளர்ந்த சமூகம்
வரதட்சணை
ஒரு வீடு
நான்கு பெண்கள்
பல வீடு
வறுமையின் கொடுமை
இன்னமும்
முதிர் கன்னிகளாய்
பெண்கள்
உணர்வுகள் பெருகி
உணர்வுகள் அழிந்து
உள்ளுக்குள் குமுறி
தேய்ந்து போகும்
உயிர்ப்புகள்
வெளிப்படும் உணர்வுகள்
விரக்தியாய் பேச்சு
துடிப்புகள் இல்லா
நடத்தை
இன்னமும்
முதிர் கன்னிகளாய்
பெண்கள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails