அதிகாலை 4.10 அந்த வீடு ஆழ்ந்த உறகத்தில் இருந்தது.
பாப்பக்கா..பாப்பக்கா… என்று வழக்கமாய் பையன் கூப்பிடும் குரல்.
பாப்பக்கா எனப்படும் அந்த பெண் எழுந்து கதவை திறந்தாள்.
தப..தப வென்று காவலர்கள் உள்ளே நுழைந்தார்கள். கூடத்தில் படுந்திருந்தவர்களை எழுப்பி விசாரித்தார்கள்.
வீட்டின் அனைத்து அறைகளையும் கேட்டறிந்து சோதனையிட்டார்கள். எந்த அறையையும் விட்டு வைக்கவில்லை. சோதனையிட்டார்கள் விபரம் அறிந்தவுடன் சென்றார்கள்.
வீட்டினுடைய சொந்தகாரர் வழக்கொன்றிற்காக விசாரணை என்ற பெயரில் நடந்த கூத்து இது. விசாரிக்கபட்ட வீடு கலவரப்பட்டது.
எதேச்ச அதிகாரம் என்னவென்று அப்பொழுது தான் உறைத்தது . மனித நேயம் அறவே இல்லாத அப்பாவி மக்கள் துன்ப படும் அதிகார ஆளுகையில் இரக்கமாவது கருணையாவது அந்த தோட்டத்தில் செடிகளும் கொடிகளும் வாழ்ந்தால் என்ன? அழிந்தால் என்ன?
No comments:
Post a Comment