Tuesday, March 24, 2009

தஞ்சையை ஆண்ட பெண்ணரசி

தஞ்சையை ஆண்ட பெண்ணரசிஒரே ஒருவர் தான். கி.பி. 1736-37 ஒரே ஆண்டு மட்டும் மன்னராக திகழ்ந்த பாவாசாகிப் எனும் இரண்டாம் ஏகோஜியின் மனைவியான ராணி சுஜான்பாய் தான் அந்த பென்னரசி .

தமக்கு மகப்பேறு இல்லாததால் தம் கணவரின் மரணத்திற்குப் பின்பு தாமே அரியணை ஏறினார்.

பாவாசாகிப் இறந்தவுடன் காட்டுராசா எனத் தன்னை கூறிக்கொண்ட சாகுஜி தானே மராட்டிய அரசுக்கு முறையான வாரிசு என கூறி சித்தோஜி துளஜி துக்காஜி சுப்பாசெட்டி போன்ற உயர்பதவி வகித்தவர்கள் ஆதரவுடன் கஜான்பாய்க்கு எதிராக சூழ்ச்சிகள் செய்தார்.

கோட்டையின் ராணுவப் பாதுகாப்புத் தலைவனாக பதவி வகித்த சையத் ராணுவத்தினரைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு சுஜான்பாயை கைது செய்ய முற்பட்டான்.

சுஜான்பாய் தாமே வாளேந்தி போரிட்டு வீரமரணம் அடைந்தார்.

இவரது ஓவியங்கள் தஞ்சை பெரிய கோயிலில் முருகன் சன்னதி அருகே உள்ள ஒரு அறையில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

1 comment:

ttpian said...

பார்த்திருக்கிறேன்.
முக்கியமாய்....இரண்டாம் சரபோஜியின் மருந்து சம்பந்தமான ஓலைச் சுவடிகல்

LinkWithin

Related Posts with Thumbnails