Friday, March 27, 2009

ஒரு மனிதனின் மலர்ச்சி ஒரு விதி அல்ல.

மனிதனின் உணர்வு நிலை நூற்றாண்டுகளாக வளர்ச்சியடையவில்லை. எப்போதாவது ஒரு முறை தான் ஒரு மனிதன் மலர்ச்சி அடைகிறான்.

லட்சக்கணக்கான மக்களில் ஒரே ஒரு மனிதனின் மலர்ச்சி ஒரு விதி அல்ல. அது விதி விலக்கு. அவன் தன்னந்தனியாக இருப்பதால் கும்பலால் அவனை ச் சகித்துக் கொள்ளமுடியாது.

அவன் ஒருவிதமான அவமானச் சின்னமாகத் தெரிகிறான். அவன் ஒரு மனிதனாக இருப்பதே அவமரியாதையாகி விடுகிறது.ஏனென்றால் அவன் உன் கண்களைத் திறக்கிறான்.உன் ஆற்றலையும் உங்கள் எதிர்காலத்தையும் உணர வைக்கிறான்.

அதனால் தான் ஒரு கௌதம புத்தரோ ஒரு கபீரோ சுவாங்தஸ்வோ உங்களை நோகடிக்கிறார். காரணம் அவர் மலர்ச்சி அடைந்திருக்கிறார்.

ஓஷோ

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails