நடுத்தர வயது பெண் தன்னுடைய பெண் ணுடன் மலையி்ல் குடியிருக்கும் சிவனை தரிசிக்க தன் ஊரிலிருந்து செல்பவர்களுடன் சேர்ந்து சென்று சிவனை தரிசித்து இறங்கினாள்.
இயல்பில் தெய்வ பக்தி மிகுந்தவளாக வெளியில் தெரியும் . உள்ளேயும் பக்தியுடன் இருந்திருப்பாள் என்று நம்புவோம். இப்போது அவள் இல்லை.
சிவனை தரிசித்துவிட்டு ஊருக்கு வந்தவுடனே அவளுடைய பெண்ணுக்கு அம்மை போட்டது. அம்மை வந்தால் மருத்துவரின் மருத்துவத்தை விட அம்மைக்காக இவர்களின் தெய்வ சடங்கு முக்கியமானது.
உடனடியாக அம்மனுக்கு பாலாபிஷேகம் வேண்டிகொண்டு ஒருநாள் காலை பக்கத்திலிருக்கும் அம்மன் கோவில் போய் பாலாபிஷேகம் செய்து விட்டுஅபிஷேக பாலுடன் வீடு திரும்பினாள்.
பஸ் ஸ்டாப்பிலிருந்து நடந்து செல்லும் தூரமே அவளுடைய வீடு . ஓரமாய் நடந்து வந்து கொண்டிருந்தாள் அவள் வந்த திசையிலே கார் ஓன்று பள்ளத்துக்காக ஒதுக்கியதில் நிலை தடுமாறி இவள் மேல் மோதியது. தூக்கியெறியப்பட்டு அதே இடத்தில் இறந்தாள்.
இறந்த காலை எத்தனை விதமான எண்ணங்கள் மனதில் ஓடியிருக்கும் . வாழ்க்கையோடு தன்னை மேன்மேலும் இணைத்து கொள்ள தான் இறக்கபோவது தெரியாது எத்தனை விதமான செயல்கள் செய்திருப்பாள்.
அவள் காலையில் அவிழ்த்து விடும் நாய்குட்டி இன்னமும் அவிழ்க்கபடாமல் …
No comments:
Post a Comment