Sunday, March 29, 2009

ஒட்டேரி நரி

அதான் சாரி கேட்டாச்சுல்ல.. அப்புறம் என்ன

நீ பிரேக் போட வேண்டியதான பிரேக் போடாம வந்து இடிச்சுட்டு சாரின்னா.. எலாசொல்லுடா..

சரி வுடு என்று போக எத்தனித்தான் பள்ளிகூட மாணவன்.

என்னது போறியா நில்லுடா..என்று சொன்னான் குடிக்கார சிறுவன். கண்கள் சிவந்து போய் பள்ளிகூட சிறுவனின் சைக்கிளை பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தான்.

அந்தசமயம் பள்ளிகூட சிறுவனுக்கு தெரிந்தவர் வர என்னடா..விடுடா அவன என்றார்.

சைக்கிளை பிடிந்திருந்தவன் முறைந்தான் இவரை என்னடா பாக்குற என்று அவர் கேட்க..

என்ன சேதி தெரியுமா ..என்னா என்று முறைத்தவாறு இவரிடம் நெருங்கினான் சிறுவன்.

எல தம்பி நீ போடா டியூசனுக்கு என்று அவனிடம் சொன்னார்.

பள்ளிகூட சிறுவன் நகர்ந்தான் .

எலா பதில் சொல்லுடா என்று கத்தினான் சிறுவன்.

சிறுவன் அங்கிருந்து நகர்ந்தான்.

யோவ் உன்னாலதான்ய்யா அவன் ஓடிப்போயிட்டான் என்று இவரிடம் பாய்ந்தான் குடிக்கார சிறுவன்.

டேய் போடா என்று பொறுமையாய் சொன்னார்.

எலா என்னடா என்று சிறுவன் கேட்க..

இவர் அவனை உதைக்க ஆரம்பித்தார்.

இருடா இந்தா வர்றேன் சொல்லியபடி ஓடினான் சிறுவன்.

இவர் அந்த இடம் விட்டு அகன்றார்.

கொஞ்ச நேரம் கழித்து மொட்டை அரிவாளுடன் வந்தான் அடிவாங்கிய இடம் வந்தான் சிறுவன்அவன வெட்டமா உட மாட்டேன் என்று அந்த இடம் அலைந்தான் சிறுவன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் காவலர் இருவர் டூவீலரில் வந்தார்கள். எலா ..கம்மானாட்டி ஏர்ற வண்டியில என்று குடிக்கார சிறுவனை அழைத்து சென்றார்கள்.

ஒட்டேரிநரி என அழைக்கப்படும் அந்த சிறுவன் படிக்க வைக்க வசதியில்லாமல் ஹோட்டல்களில் வேலைப் பார்த்தவன்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails