Tuesday, May 12, 2009

மகனை கொன்ற தந்தை ஐபிஎல் கிரிக்கெட் கொடுத்த பிரசாதம்.

மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்தவர் மேக்நாத் காம்ளே.தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

வேலை முடித்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பினார். சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார். அவரது மகன் டெல்லி-கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியை பார்த்துக்கொண்டிருந்தார்.

தூங்குவதற்கு இடைஞ்சலாக இருக்கிறது டி.வி.யை ஆப் செய் கூறி உள்ளார். டி.வி.யை ஆப் செய்ய முடியாது என்று மறுத்தமகன் தந்தையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

ஆத்திரம் அடைந்த தந்தை சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து மகனின் நெஞ்சில் குத்தினார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அளவு முறை இல்லாமல் போனால் எதுவும் சங்கடமே..

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails