ஆறுதல் சொல்ல
மனமில்லை
ஆதரவுகரம் நீட்ட
வழியில்லை
நினைத்து
நினைத்து
வெம்பும் மனதினாய்
நீங்கள் படும்
துயர் நினைக்க
துயரங்களுக்கு
விடியல் என்றோ
தெரியவில்லை
உயிர் வாழ
உயிர் இழந்து
வாழ்கின்றோம்
ஓர் இனத்தின்
அழிவில்
ஓர் இனம்
வாழ முடியாது
பொறுமை கொள்வோம்
காலம் வரும்
அதுவரையில்
உங்களில்
ஒருவனாய்
ஒரு தமிழன்
No comments:
Post a Comment